நாங்கள்...

வணக்கம்,

நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாக எங்களது அறநிதிவாரியத்தின் வாயிலாக, எங்களால் இயன்ற அடிப்படை தேவைகளை கூலிம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு வழங்குகின்றோம்.

இந்த இணைய பக்கத்தை வளம் வரும் நல் உள்ளங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு,
இயன்றவரை அனைத்து பக்கங்களையும் பார்வையிட்டு, மனிதாபிமான அடிப்படையில்; சமுதாய நலனில் விழிப்புணர்வுகொண்டு; பற்றும் பரிவும்கொண்டு;

நிலை குன்றியவர்களுக்கும், சமுதாயத்தின் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வாழ்பவருக்கும், கல்வி வசதி அறியா இளம் நெஞ்சங்களுக்கும்;
எங்கள் வாரியத்தின் துணைக்கொண்டு இயன்ற உதவிகளை அளித்திட...

அன்புடன் அழைக்கின்றோம் ... வருக வருகவென...

sun

Friday, 1 June 2007

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு முதல் தகுதி என்ன?



வைரமுத்துவின் பதில்:

அவமானம் தாங்குதல்.சுயமானமே பெரிதென்று கருதுகின்றவர்கள் பொதுமானம் காக்க முடியாது.
அனாதைப் பிள்ளைகளுக்கு நிதி திரட்டக் கடை வீதிக்குப் போகிறார் அன்னை தெரசா. ஒரு கடைக்காரன் கஞ்சன், தேனிலவுக்குக் கூடத் தனியாய்ப் போய்வந்தவன்.
அவனிடம் கையேந்துகிறார் அன்னை...‘‘ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு...’’‘‘ஒண்ணும் தரமுடியாது; ஓடிப்போ கெழவி’’ ஏந்திய கை மடங்கவில்லை.‘‘ஏதாவது கொடுங்கள்... என் பிள்ளைகளுக்கு...’’‘‘சொன்னாக் கேக்கமாட்ட...’’ஏந்திய இடக்கையில் வந்து விழுகிறது அவன் காறித்துப்பிய கற்றை.
எச்சில் விழுந்த இடக்கையை மூடிக்கொண்டு‘‘நீ காறித்துப்பியது எனக்கு; என் பிள்ளைகளுக்கு...’’ என்று வலக்கை நீட்டுகிறார் அன்னை.
எழுந்து நின்று கும்பிட்டு, கண் துடைத்துக்கொண்டே காசு போடுகிறான் கடைக்காரன்..

No comments: